விஜய் தற்போது தன்னுடைய 60வது படத்தின் படப்பிடிப்பிற்காக பொள்ளாச்சியில் உள்ளார். போக்குவரத்து மிகுந்த ஒரு சாலையில் படக்குழு படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.பொள்ளாச்சிக்கு விஜய் வந்திருக்கிறார் என்ற செய்தி தெரிந்ததும் அவரை காண ஏராளமான ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் குவிந்திருக்கின்றனர்.
இந்த கூட்டத்தை கண்டு ஷாக்கான விஜய் என்னால் கூட்டத்திற்கு நடுவே நடிக்க முடியாது, சென்னையில் செட் போட்டு இந்த காட்சியை எடுத்துக் கொள்ளலாம் என இயக்குனரிடம் கூறிவிட்டு சென்னைக்கு புறப்பட்டுவிட்டாராம்.
பொள்ளாச்சியில் எடுக்க முடியாமல் போன காட்சி சென்னையில் அடுத்த மாதம் 2ம் தேதி நடக்க இருக்கிறதாம்.
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.